அமுதம் சிந்திய இடங்களாக கங்கை நதியில் இரண்டு இடங்களை சொல்வர். முதலாவது, கங்கை இமயமலையில் இருந்து இறங்கி சம வெளியில் கால் பதிக்கும் இடத்தில் இருக்கும் ஹரித்துவார். கங்கை, யமுனை சரஸ்வதி சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் இருக்கும் இரண்டாவது இடம்.தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலை கடைந்தனர்.இடையில் இடையூறுகள் பல வந்தன. இறுதியில் அமுதம் கிடைத்தது. கிடைத்தவுடன் அதை ஒரு குடத்தில் எடுத்துக் கொண்டு தேவலோகம் பறந்தான் தேவேந்திரன் மகன் ஜெயந்தன். அமுதத்தை எதிர்பார்த்து காத்திருந்த அசுரர்கள் கோபம் கொண்டனர். அமுத குடத்தை கைப்பற்ற முயர்ச்சித்தனர்.தேவர்கள் தடுத்தனர். இருவருக்கிடயே போர் மூண்டது. ஜெயந்தன் வைத்திருந்த அமுத குடத்தை காப்பாற்ற சந்திரனும், குருவும் ஒன்று சேர்ந்து துணை நின்றனர். ஜெயந்தன் வைத்திருந்த அமுத குடத்தில் இருந்து அமுத துளிகள் சில இடங்களில் சிந்தின. அப்படி ஓரிரு துளிகள் அமுதம் சிந்திய இடங்கள் ஹரித்துவார், அலகாபாத், நாசிக், உஜ்ஜயினி. இந்த இடங்களில் நடக்கும் தீர்த்தவாரித்திருவிழா தான் கும்பமேளா.
Thursday, November 27, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment