Thursday, November 27, 2008

தேங்காய் எண்ணையில் ஆபத்து கிடயாது


கல்ப விருட்சம் என தென்னயை நம் முன்னோர்கள் வர்ணித்து ஒரு புனித அந்தஸ்தை வழங்கி இருக்கிறார்கள்.பூஜையிலும் சரி பண்டிகைகால பலகாரங்களிலும் சரி தேங்காய், தேங்காயெண்ணைக்கு தான் முக்கியத்துவம்.ஆனால் சமீப காலமாக நம் உணவில் ‌தேங்காய் சேர்ப்பதயே குறைத்து விட்டோம். இதற்கு காரணம் தேங்காயெண்ணையில் உறையும் தன்மையுள்ள கொழுப்பு 92% இருப்பதாக சொல்லப்பட்டது தான். உறையும் தன்மையுள்ள பூரித வகை கொழுப்புகள் இரத்த குழாய்களில் படிந்து இரத்த கொழுப்புகளில் அடைப்பை ஏற்படுத்தி மாரடைப்பு நோயை ஏற்ப்படுத்துகின்றன என்று நம் மனதில் ஆழ பதிந்து விட்டது.எல்லா வகையான பூரித கொழுப்புகளும் ஒரே மாதிரியான தன்மையுடையது இல்லை. இதில் மூன்று வகைப்படும்.

1.நீள வகையான கொழுப்பு அமிலங்கள் long chain fatty acid [lcfa]

2.மத்திம வகையான கொழுப்பு அமிலங்கள் medium chain fatty acid [mcfa]

3.குட்டை வகையான கொழுப்பு அமிலங்கள் short chain fatty acid [scfa]

பொதுவாக பூரித கொழுப்புகள் நீள வகையான கொழுப்பு அமிலங்கள் கொண்டவை.ஒரு கிராமுக்கு ஒன்பது கலோரிகளை கொண்டதாக இருக்கும். ஆனால் தேங்காயெண்ணையில் உள்ள மத்திம வகையான கொழுப்பில் ஒரு கிராமுக்கு ஆறு கலோரிகள் தான் உள்ளது. நீள வகையான கொழுப்பு ஜீரணமாவதர்க்கு அதிக நேரம் ஆகும். அதனால் அவை உடலில் சேமித்து வைத்து கொள்ளப்பட்டு உடலில் சேர்ந்து அழுந்த படிந்து விடுகிறது[staturated fat] இந்த வகையான கொழுப்பை கரைப்பது மிகவும் கடினம். ஆனால் தேங்காயெண்ணையில் உள்ள மத்திம வகையான கொழுப்பு அமிலங்கள் ஜீரண உறுப்புக்கு அதிகம் வேலை கொடுக்காமல் விரைவில் கல்லீரலுக்கு அனுப்பபட்டு உடனே சக்தியாக மாற்றப்பட்டு செலவழிக்கப்பட்டு விடுகிறது.மற்ற கொழுப்புகளை போல சேமிக்க படுவதில்லை. தேங்காயெண்ணை உடலுக்கு அதிக சக்தியளித்து உடல் எடையை குறைக்க வகை செய்கிறது. உடல் சக்தியை [thermogenisis]அதிகரிக்க செய்கிறது. மற்றொரு அருமயான விஷயம், தாய்ப்பாலில் மட்டுமே உள்ள lauric acid ‌தேங்காயில் அமைந்துள்ள கொழுப்பில் 50% உள்ளது. மற்ற எந்த உணவிலும் இப்படி அமைந்ததில்லை lauric acid .வைரஸ் கிருமிகளால் உண்டாகும் சளி, இருமல். அம்மை நோய், தட்டம்மை, சார்ஸ், பாக்டிரியாக்களால் தோன்றும் பால்வினை நோய்கள், டைபாய்டு, வயிற்று நோய்கள், வாந்தி, பேதி போன்ற பல நோய்களை வரவிடாமல் தடுக்கின்றன.
தேங்காயெண்ணையின் நன்மைகள்...
*உறையும் வகை கொழுப்பு வகையை சார்ந்ததாய் இருந்தால் கூட குறைந்த சக்தியிலேயே உடலுக்கு நல்ல தெம்பை அளிக்கிறது.
*தேங்காயில் உள்ள கொழுப்பை ஜீரணிப்பதர்க்கு இன்சுலின் தேவைப்படுவதில்லை.அதனால் நீரிழிவு நோயாளிகள் சிலருக்கு சாப்பிட்டபின் ரத்தத்தில் சர்க்கரை அதிகம் தோன்றுவதில்லை.இது புற்று நோய்க்கும், நீரிழிவு நோய்க்கும், எதிராக செயல்படுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
*உடல் இளைக்க விரும்புபவர்கள் தேங்காயெண்ணையை பயன்படுத்தினால் அது நம் உடலில் நிகழும் வளர்ச்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தி நன் உடலில் உள்ள அதிக கலோரிகளை எரித்து உடல் பருமனை குறைக்கின்றது. உடல் எடை கூடுவதர்க்கு கொழுப்பு சார்ந்த உணவுகள் தான் காரனம் என்று நாம் முடிவு செய்துவிடமுடியாது. கொழுப்பை விட உடல் எடை கூடுவதற்க்கு முக்கிய காரனமாக அமைவது தீட்டப்பட்ட மாவு பொருட்களும் மற்றும் சர்க்கரை, சர்க்கரை சார்ந்த பொருட்களுமே!
ஹைட்ரோஜினேஷன் செய்ய படாத சுத்தமான செக் எண்ணை மிகவும் நல்லது. ஹைட்ரோஜினேஷன் என்ற முறையில் எண்ணையின் வாழ் நாள் அதிகரிக்கபடுகிறது.இந்த முறையில் டிரான்ஸ் கொழுப்பு உண்டாகின்றது. இவை ரத்தத்தில் உள்ள தீமை செய்யும் கொலஸ்டிராலை அதிகரித்து [], நன்மை செய்யும் கொலஸ்டிராலை[]குறைத்து விடுகிறது.சுத்தமான செக் எண்ணையில் டிரான்ஸ் கொழுப்பு அமிலங்கள் இல்லை. மேலும் தேங்காயெண்ணை மற்ற எண்ணையை விட சூடு தாங்கும் திறன் கொண்டது. சூடு படுத்தும் பொழுது விரைவில் புகைய ஆரம்பிக்காது.450*f [230*c] வரை திடமாக சூட்டை தாங்கும். ஆலிவ் எண்ணை கூட 375*f [190*c] வரை தான் சூடு தாங்கும். அதிக சூடு படுத்தும் பொழுது டிரான்ஸ் கொழுப்பு அமிலங்கள் உண்டாகிவிடும் ஆபத்து உள்ளது. ஆனல் தேங்காய் எண்ணையில் அந்த ஆபத்து கிடயாது.

No comments: