Thursday, November 27, 2008

பல் சிகிச்சை


பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வடிய பொதுவாக இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று ஈறுகளில் அழுக்கு சேர்ந்திருப்பது. இன்னொன்று வைட்டமின் குறைபாடு.பல் மருத்துவரிடம் சென்று பல்லை சுத்தம் செய்வது மூலம் , ஈறுகளில் சேர்ந்திருக்கும் அழுக்கை நீக்கி விடலாம். வைட்டமின் குறைபாடு என்றால் மருத்துவரின் ஆலோசனைப்படி அதற்கான மாத்திரைகளை எடுத்து கொள்ள வேண்டும்.
உங்களின் அடுத்த பிரச்சனை பல் தேய்மானம். கிருமிகள் நமது பல்லை அரித்து அதை தேய செய்வதை சொத்தை பல் என்கிறோம். ஆனால் கிருமிகளே இல்லாமல் இயற்கையாக நமது பல் தேய்ந்து போவது தான் பல் தேய்மானம். வேகமாக பல் துலக்குவது, வெகு நேரம் பல் துலக்குவது, அதிக அமிலதன்மை உள்ள உணவுகளை உண்பது போன்ற காரணங்களால் பற்களின் வெளிப்புற சுவரான எனாமல் தேயும். சிலருக்கு இந்த தேய்மானம் தீவிரமடைந்து பல்லின் வேர் வரை கூட பாதிப்பை ஏற்ப்படுத்தும்.பல் சிகிச்சைக்கான சிமென்டை பாதிக்கபட்ட பல்லின் தேய்ந்த பகுதியில் வைத்து பூசி விடுவதே இதற்கான சிகிச்சை. தற்காலிகமான சிகிச்சை முறை , நிரந்தர சிகிச்சை முறை என இதிலும் இரண்டு வகை உண்டு...... தற்காலிகமான சிகிச்சை முறையின் பலன் இரண்டிலிருந்து மூன்று மாதங்கள் வரை நீடிக்கும். நிரந்தர சிகிச்சை முறை மூன்றிலிருந்து ஐந்து வ‌ருட‌ங்கள் வ‌ரை நீடிக்கும். அத‌ன் பின் மீண்டும் ப‌ற்க‌ளில் பாதிப்பு ஏற்ப்ப‌ட்டால் இந்த‌ சிகிச்சையை மீண்டும் எடுத்து கொள்ள‌ வேண்டிவ‌ரும்......

No comments: