
காசி
நதிகளில் மிகவும் புனிதமாக கங்கை நதி கருதபடுகிறது.இந்துமத சடஙகுகளில் தண்ணீரை குடிக்கும் போது கங்காதீர்த்தம் என்று கூறுவதே வழக்கம்.கங்கை நதி பல ஊர்களை கடந்து வந்தாலும் காசியை தான் மிகவும் புனிதமாக நீராடும் கட்டமாக கருதுகிறார்கள்.காசா என்ற மன்னன் இந்த பிரதேசத்தை ஆண்டதால் காசி என்று அழைக்கப்பட்டதாம். கங்கையில் 64 நீராடும் கட்டங்கள்( படித்துறைகள்) இருக்கின்றன. அவற்றில் முக்கியமானவை மணி கர்ணிகா கட்டம், அசிசங்கமக் கட்டம், வருணசங்கமக் கட்டம், பஞ்சகங்கா கட்டம், தச அசுவமேதா கட்டம் ஆகியவைதான்.ஆனால் ஆலயத்தின் சுவாமிக்கு அபிஷேகம் செய்ய விசாலாக்ஷி கட்டத்தில் நீராடி அங்கிருந்து கங்கா நீரை எடுத்து வர வேண்டும்.12 ஜோதிர்லிங்கங்களில் விசுவநாதர் முதன்மையனவர். அவருக்கு நாமே அபிஷேக ஆராதனை செய்யலாம்.காசியின் தேவியான விசாலாக்ஷி ஆலயம் விசுவநாதர் ஆலயம்பக்கத்து தெருவில் தான் இருக்கிறது.விசுவநாதர் ஆலயம் அருகில் அன்னபூரணி ஆலயம் இருக்கிறது. மக்களுக்கு அன்னம் அளிக்க தேவி கையில் கரண்டியுடன் தரிசணம் தருகிறார். தீபாவளி அன்று ஈசுவரனுக்கு அன்னம் அளிக்கும் விழா மிக முக்கியமானது. இதை மிட்டாய் திருவிழா என்று அழைப்பர். அன்று அன்னபூரணி சர்வலங்கார பூஷிதயாக ஆலயத்தின் மாடியில் அமர்ந்திருப்பாள்.ஒரு கையில் தங்க பாத்திரமும் மறு கையில் தங்க கரண்டியும் இருக்கும். அன்னையின் முன்னால் ஈசுவரன் கையில் தங்க திருவோட்டுடன் நின்றிருப்பார். அன்னையின் எதிரில் 30 பெரிய தட்டுகளில் பலவிதமான இனிப்புகள் வைப்பார்கள். ஈசுவரனுக்கு அன்னை அன்னமிட்ட பிறகு இனிப்புகள் வினியோகிப்பார்கள்.காசியில் 1500 ஆலயங்கள் இருக்கின்றது. துர்கைக்கு தனி ஆலயம் இருக்கிறது. அவற்றில் விசுவநாதர், விசாலாக்ஷி, அன்னபூரணி, கால பைரவர் ஆலயங்கள் முக்கியமானவை.காசியில் மானிடர்களோ விலங்குகளோ பறவைகளோ உயிரை விடும்போது விசுவேசுவரர் அதனை தன் மடியில் இருத்தி அதன் செவிகளில் தாரகமந்திரம்ஓதுகிறார். தாரகமந்திரம், ஓம்காரம், மஹாவாக்கியம், ராமநாமம் என மூன்றையும் குறிக்கும். அப்போது அவ்வுயிர் இறைவனுடன் ஒன்றி விடும். முக்தி கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை
நதிகளில் மிகவும் புனிதமாக கங்கை நதி கருதபடுகிறது.இந்துமத சடஙகுகளில் தண்ணீரை குடிக்கும் போது கங்காதீர்த்தம் என்று கூறுவதே வழக்கம்.கங்கை நதி பல ஊர்களை கடந்து வந்தாலும் காசியை தான் மிகவும் புனிதமாக நீராடும் கட்டமாக கருதுகிறார்கள்.காசா என்ற மன்னன் இந்த பிரதேசத்தை ஆண்டதால் காசி என்று அழைக்கப்பட்டதாம். கங்கையில் 64 நீராடும் கட்டங்கள்( படித்துறைகள்) இருக்கின்றன. அவற்றில் முக்கியமானவை மணி கர்ணிகா கட்டம், அசிசங்கமக் கட்டம், வருணசங்கமக் கட்டம், பஞ்சகங்கா கட்டம், தச அசுவமேதா கட்டம் ஆகியவைதான்.ஆனால் ஆலயத்தின் சுவாமிக்கு அபிஷேகம் செய்ய விசாலாக்ஷி கட்டத்தில் நீராடி அங்கிருந்து கங்கா நீரை எடுத்து வர வேண்டும்.12 ஜோதிர்லிங்கங்களில் விசுவநாதர் முதன்மையனவர். அவருக்கு நாமே அபிஷேக ஆராதனை செய்யலாம்.காசியின் தேவியான விசாலாக்ஷி ஆலயம் விசுவநாதர் ஆலயம்பக்கத்து தெருவில் தான் இருக்கிறது.விசுவநாதர் ஆலயம் அருகில் அன்னபூரணி ஆலயம் இருக்கிறது. மக்களுக்கு அன்னம் அளிக்க தேவி கையில் கரண்டியுடன் தரிசணம் தருகிறார். தீபாவளி அன்று ஈசுவரனுக்கு அன்னம் அளிக்கும் விழா மிக முக்கியமானது. இதை மிட்டாய் திருவிழா என்று அழைப்பர். அன்று அன்னபூரணி சர்வலங்கார பூஷிதயாக ஆலயத்தின் மாடியில் அமர்ந்திருப்பாள்.ஒரு கையில் தங்க பாத்திரமும் மறு கையில் தங்க கரண்டியும் இருக்கும். அன்னையின் முன்னால் ஈசுவரன் கையில் தங்க திருவோட்டுடன் நின்றிருப்பார். அன்னையின் எதிரில் 30 பெரிய தட்டுகளில் பலவிதமான இனிப்புகள் வைப்பார்கள். ஈசுவரனுக்கு அன்னை அன்னமிட்ட பிறகு இனிப்புகள் வினியோகிப்பார்கள்.காசியில் 1500 ஆலயங்கள் இருக்கின்றது. துர்கைக்கு தனி ஆலயம் இருக்கிறது. அவற்றில் விசுவநாதர், விசாலாக்ஷி, அன்னபூரணி, கால பைரவர் ஆலயங்கள் முக்கியமானவை.காசியில் மானிடர்களோ விலங்குகளோ பறவைகளோ உயிரை விடும்போது விசுவேசுவரர் அதனை தன் மடியில் இருத்தி அதன் செவிகளில் தாரகமந்திரம்ஓதுகிறார். தாரகமந்திரம், ஓம்காரம், மஹாவாக்கியம், ராமநாமம் என மூன்றையும் குறிக்கும். அப்போது அவ்வுயிர் இறைவனுடன் ஒன்றி விடும். முக்தி கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை
No comments:
Post a Comment